ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்


ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Sep 2021 8:54 AM GMT (Updated: 14 Sep 2021 8:54 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள மெயின் சவுக் என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை குறிவைத்து அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசினர். 

இந்த தாக்குதலில்  பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மூன்று பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story