குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு


குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு : மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 10:22 AM GMT (Updated: 14 Sep 2021 10:22 AM GMT)

குஜராத்தில் கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்து வருகிறது.

அகமதாபாத்,

குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 8 நகரங்களில் வரும் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. 

குஜராத்தில் கடந்த  3 தினங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.  அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து 14 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 165- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story