மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,530-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் மேலும் 3,530- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை
65,04,147- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,38,221- ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய பாதிப்பை ஒப்பிடும் போது இன்று தொற்று பாதிப்பு லேசாக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் நேற்ற்று 2,740- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்புக்கு 27 பேர் உயிரிழந்து இருந்தனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 49,671- ஆக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 97.06- சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story