உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது


உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2021 4:59 PM GMT (Updated: 14 Sep 2021 4:59 PM GMT)

உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பினை கண்டறிந்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.


லக்னோ,


உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் லக்னோ, ரே பரேலி, பிரதாப்கார் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பிரயாக்ராஜ் நகரில் இருந்து படையினர் கண்டறிந்தனர்.  அதன்பின் அந்த வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டது.

இந்த அதிரடி சோதனையில், ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பு ஒன்றை படையினர் கண்டறிந்து, 3 பயங்கரவாதிகளையும் கைது செய்துள்ளனர்.  இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. தெரிவித்து உள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story