கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சித்தராமையா


கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சித்தராமையா
x
தினத்தந்தி 14 Sep 2021 5:42 PM GMT (Updated: 14 Sep 2021 5:42 PM GMT)

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து ஒரு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். நாங்கள் நடத்திய மாட்டு வண்டி போராட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறை கூறியுள்ளார். இதற்கு முன்பு டெல்லியில் வாஜ்பாய், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்தார். இது பசவராஜ் பொம்மைக்கு தெரியாதா?.

யாதகிரியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். கர்நாடகத்திற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக மைசூருவில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா குறை கூறுகிறார். அவர் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story