மும்பை பங்கு சந்தையில் புதிய உச்சம்; சென்செக்ஸ் குறியீடு 59,724 புள்ளிகளாக உயர்வு


மும்பை பங்கு சந்தையில் புதிய உச்சம்; சென்செக்ஸ் குறியீடு 59,724 புள்ளிகளாக உயர்வு
x
தினத்தந்தி 17 Sep 2021 6:16 AM GMT (Updated: 17 Sep 2021 6:16 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் உச்சமடைந்து 59,724 புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் உச்சமடைந்து 59,724 புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை பங்கு சந்தையில் பண்ணாரி அம்மன் நிறுவனம், காஸ்மோ பிலிம்ஸ் ஆகியவை லாப நோக்குடனும், செயில் மற்றும் ஐ.டி.பி.ஐ. உள்ளிட்டவை நஷ்டத்துடனும் காணப்பட்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 17,800 புள்ளிகளாக உள்ளது.  இவற்றில், ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., எஸ்.பி.ஐ. லைஃப் மற்றும் இண்டஸ்இண்ட் உள்ளிட்ட பங்குகள் லாப நோக்குடன் இருந்தன.


Next Story