டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Sep 2021 11:13 AM GMT (Updated: 17 Sep 2021 11:13 AM GMT)

டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 56 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். 

டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 407- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு டெல்லியில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 74,099- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொற்று பாதிப்பு விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது. டெல்லியில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 428- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,085- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story