மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 3,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,15,111ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 67 பேர் பலியானார்கள்.
மொத்த பலி எண்ணிக்கை 1,38,389ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 48,451 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவிலிருந்து இன்று 4,410 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,24,720ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story