ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு


ஒடிசாவில்  மேலும் 510 பேருக்கு கொரோனா -  6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 Sep 2021 9:38 AM GMT (Updated: 20 Sep 2021 9:38 AM GMT)

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ்வர், 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,20,754- ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் நேற்று 623- பேரும் நேற்று முன் தினம் 695 பேரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 510 பேரில் 79 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  தொற்று பாதிப்பால் இன்று 6- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 62,509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 0.81 சதவிகிதமாக உள்ளது. 


Next Story