ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா


ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Sep 2021 12:52 PM GMT (Updated: 21 Sep 2021 12:52 PM GMT)

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி, 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 1,179- பேருக்கு கொரோனா வைஅஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில்  1,651- பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 905 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,089- ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 40 ஆயிரத்து 708- ஆகவும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 12 ஆயிரத்து 714- ஆகவும்  உள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 192 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 


Next Story