டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா


டெல்லியில் மேலும்  30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Sep 2021 11:17 AM GMT (Updated: 22 Sep 2021 11:17 AM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  கொரோனா தொற்றில் இருந்து இன்று 19 பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,38,586- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 13 ஆயிரத்து 090- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,085- ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 70,651- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

Next Story