மனைவிக்கு தெரியாமல் எனது மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன் - நிதின் கட்கரி பேச்சு


மனைவிக்கு தெரியாமல் எனது மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன் - நிதின் கட்கரி பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2021 2:56 PM GMT (Updated: 22 Sep 2021 2:56 PM GMT)

மனைக்கு தெரியாமல் தனது மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

டெல்லி-மும்பை இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக அரியானாவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில், எனக்கு அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. எனது மாமனாரின் வீடு மராட்டியத்தின் ராம்டெக் நகரில் சாலையில் நடுவே அமைந்திருந்தது. இது புதிதாக அமைக்கப்படும் சாலைக்கு இடையூறாக இருந்தது. இதனால், எனது மனைவிக்கு தெரியாமல் எனது மாமனாரின் வீட்டை இடிக்க நான் உத்தரவிட்டேன்’ என்றார்.

Next Story