ரெயில்வேயில் பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: நிதி அமைச்சகம் பரிந்துரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Sep 2021 8:49 PM GMT (Updated: 22 Sep 2021 8:49 PM GMT)

ரெயில்வேயில் பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி, 

கடந்த 1927-ம் ஆண்டு, ரெயில்வேயில் பயிற்சி திட்டம் (அப்ரண்டிஸ்ஷிப்) தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இந்த 94 ஆண்டுகால வழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரெயில்வேக்கு மத்திய நிதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. ரெயில்வேயை சீரமைப்பது தொடர்பான அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரெயில்வேயில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்த நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. வழக்கமான கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்து தயார்படுத்துவது சிக்கலாக உள்ளது. ஆகவே, பழைய முறைப்படி பயிற்சி திட்டத்தை தொடங்கினால், திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, ரெயில்வேக்கு ஏற்ப அவர்களை மாற்ற முடியும்.

இதுபோல், ரெயில்வேயில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். ரெயில்டெல், ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அமைப்புகளையும் இணைக்க வேண்டும். ரெயில்வே சார்பில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் நடத்துவதை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story