மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி


மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
x
தினத்தந்தி 23 Sep 2021 8:59 AM GMT (Updated: 23 Sep 2021 8:59 AM GMT)

மேற்குவங்காளத்தில் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தின் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. 

அந்த பஸ்சில் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 20 புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்தனர். அவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைக்கு பணிபுரிய சென்றுகொண்டிருந்தனர்.

வடக்கு தினஜ்பூர் மாவட்டம் ராய்கன்ஞ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story