நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளன - துணை ஜனாதிபதி
நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ’மாயாஜால தெற்கு’ என்ற தலைப்பில் உலகளாவிய இணைப்பு மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில், நான் தென் மாநிலங்களை பார்க்கும்போது, அவை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய சக்தியாக உள்ளது என்பதை நான் பார்க்கிறேன். அதிக நம்பிக்கை, சாத்தியக்கூறுகள், முன்னேற்றம் கொண்ட பகுதியாக தென் மாநிலங்கள் உள்ளது. இந்த அனைத்து கூறுகளையும் கொண்டதால் தென் மாநிலங்கள் தனித்துவம் பெற்றதாகவும், மாயாஜாலம் நிறைந்ததாகவும் உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story