மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்ந்து 59,885 புள்ளிகளாக உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்ந்து (1.63 சதவீதம்) 59,885 புள்ளிகளாக இன்று உள்ளது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 276 புள்ளிகள் உயர்ந்து (1.57 சதவீதம்) 17,823 புள்ளிகளாக உள்ளது. நிப்டி குறியீடானது ரியல் எஸ்டேட் துறை (8.4 சதவீதம்), நிதி துறை (2.3 சதவீதம்), தனியார் வங்கி (2.2 சதவீதம்) மற்றும் உலோகம் (1.5 சதவீதம்) என அனைத்து பிரிவுகளிலும் லாபத்துடன் காணப்பட்டது.
இதுதவிர, பங்குகளில் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் 12.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,195.95 என்ற அளவில் இருந்தது. இதனை தொடர்ந்து டி.எல்.எப். நிறுவனம் ரூ.401.95 என்ற அளவில் (8.9 சதவீதம் உயர்ந்து) இருந்தது.
Related Tags :
Next Story