கேரளாவில் இன்று 19,682 பேருக்கு கொரோனா - 152 பேர் பலி


கேரளாவில் இன்று 19,682 பேருக்கு கொரோனா - 152 பேர் பலி
x
தினத்தந்தி 23 Sep 2021 2:17 PM GMT (Updated: 23 Sep 2021 2:17 PM GMT)

கேரளாவில் இன்று 19,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 19 ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 79 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 46  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 20 ஆயிரத்து 510 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து 94 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 152 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

Next Story