தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...


தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...
x
தினத்தந்தி 23 Sep 2021 3:12 PM GMT (Updated: 23 Sep 2021 3:12 PM GMT)

தலைநகர் டெல்லியில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 634 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 26 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 13 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா பாதிப்பால் டெல்லியில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 என்ற அளவில் உள்ளது.

Next Story