அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வன்முறை; 9 போலீசார் காயம்
தினத்தந்தி 23 Sep 2021 3:14 PM GMT (Updated: 23 Sep 2021 3:14 PM GMT)
Text Sizeஅசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஏற்பட்ட வன்முறையில் 9 போலீசார் காயமடைந்து உள்ளனர்.
கவுகாத்தி,
அசாமின் தர்ரங் நகரில் சிபாஜர் என்ற இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீசார் அடங்கிய குழு ஒன்று ஈடுபட்டது. இதில், திடீரென ஒரு கும்பல் அவர்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் 9 போலீசார் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire