அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வன்முறை; 9 போலீசார் காயம்


அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வன்முறை; 9 போலீசார் காயம்
x
தினத்தந்தி 23 Sep 2021 3:14 PM GMT (Updated: 23 Sep 2021 3:14 PM GMT)

அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஏற்பட்ட வன்முறையில் 9 போலீசார் காயமடைந்து உள்ளனர்.



கவுகாத்தி,

அசாமின் தர்ரங் நகரில் சிபாஜர் என்ற இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீசார் அடங்கிய குழு ஒன்று ஈடுபட்டது.  இதில், திடீரென ஒரு கும்பல் அவர்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 9 போலீசார் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.




Next Story