கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து


கனமழை எச்சரிக்கை:  மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து
x
தினத்தந்தி 25 Sep 2021 11:26 AM GMT (Updated: 25 Sep 2021 11:26 AM GMT)

மேற்கு வங்காளத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.




கொல்கத்தா,

மேற்கு வங்காள அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையை முன்னிட்டு கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையும் வருகிற அக்டோபர் 5ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளது.


Next Story