டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூடு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லி குற்ற பிரிவு இணை காவல் ஆணையாளர் அலோக் குமார் இன்று கூறும்போது, டெல்லியில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மொத்தம் 188 பேரில் 107 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இதுதவிர, போதை பொருட்கள் கடத்தல், ஆயுத கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களும் உள்ளன. மூன்றாவது நிலையிலான கும்பல்களும் உள்ளன. இவர்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் உண்டு என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story