டெல்லி தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து


டெல்லி தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 25 Sep 2021 9:20 PM GMT (Updated: 25 Sep 2021 9:20 PM GMT)

டெல்லியில் உள்ள தாப்ரி பகுதியில் ஒரு தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் தாப்ரி என்ற இடத்தில் தனியார் பல்வேறு தனியார் நிறுவனங்களும், சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன. இந்த நிலையில் அங்கு அட்டைகளை சேமித்து வைக்கும் ஒரு சேமிப்புக் கிடங்கில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

முன்னதாக அங்குள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில், தீ மளமளவென பரவியதால் தீயை அணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்களில் சுமார் 14 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நீண்ட நேர போரட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக தீ கட்டுக்குள் வந்தது. இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story