இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Sep 2021 4:00 AM GMT (Updated: 27 Sep 2021 4:00 AM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று ஏற்றம், இறக்கங்களை சந்தித்தி வருகிறது. இதன்படி நேற்று முன் தினம் 29,616 பேருக்கும், நேற்று 28,326 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,041 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 041 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 15,951 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,78,786 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 276 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,47,194 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 29,621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,31,972 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.78 % ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,99,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 86,01,59,011 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,18,362 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,65,006 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,44,08,251 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

Next Story