கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி


கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 27 Sep 2021 1:13 PM GMT (Updated: 27 Sep 2021 1:13 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,


நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்படுகின்றன.  எனினும், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த சூழலில், கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருந்த பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து வந்து 12 ஆயிரத்திற்கும் கீழ் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒரே நாளில் 17,763 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 44,59,193 ஆக உயர்ந்து உள்ளது.  1,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  58 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 24,661 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story