போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்


போராடும் விவசாயிகளுடன்  பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Sep 2021 2:22 PM GMT (Updated: 27 Sep 2021 2:22 PM GMT)

விவசாயிகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும், இல்லையெனில் நமது நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் போராட்டத்தால் ரெயில், சாலை போக்குவரத்து வட இந்தியாவில் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. டெல்லியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகியது. 

இதனால் டெல்லி நகரம் திணறியது.  விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் கூறினார்.  இந்த நிலையில், போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 


Next Story