மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது


மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 27 Sep 2021 4:54 PM GMT (Updated: 27 Sep 2021 4:54 PM GMT)

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 2,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,41,762 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,38,902 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 2,895 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,62,248 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 37,036 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story