ம.பி யில் 86% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது...


ம.பி யில் 86% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது...
x
தினத்தந்தி 27 Sep 2021 10:54 PM GMT (Updated: 27 Sep 2021 10:54 PM GMT)

ம.பி யில் 86% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 86% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், செப்டம்பர் 26 வரை மொத்தம் 6.11 கோடி டோஸ் தடுப்பூசி மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அதிக மக்களுக்கு போடப்பட்ட மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.

Next Story