கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்


கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 28 Sep 2021 10:49 AM GMT (Updated: 28 Sep 2021 10:49 AM GMT)

கர்நாடக காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஐதராபாத்,

கர்நாடகாவில் உள்ள சிந்த்கி மற்றும் ஹங்கல் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிந்த்கி தொகுதியின் ஜனதாதள கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. மங்குலி மற்றும் ஹங்கல் தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சி.எம். உதைசி ஆகிய இருவரும் உயிரிழந்ததையடுத்து, இந்த 2 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வரும் அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 13 -ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அதனை தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Next Story