கர்நாடகத்தில் இன்று 782 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


கர்நாடகத்தில் இன்று 782 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 28 Sep 2021 2:24 PM GMT (Updated: 28 Sep 2021 2:24 PM GMT)

கர்நாடகாவில் தற்போது 12,634 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகா மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,74,528 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,24,102 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 12,634 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story