என்.டி.பி.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்


என்.டி.பி.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்
x
தினத்தந்தி 30 Sep 2021 8:13 AM GMT (Updated: 30 Sep 2021 8:13 AM GMT)

ரெயில்வே நடத்திய என்.டி.பி.சி பணியிடங்களுக்கான முதல்கட்ட சிபிடி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

புதுடெல்லி

ரெயில்வேயின் என்.டி.பி.சி பணிகளுக்கான முதல் கட்ட சிபிசி தேர்வுகள் ஏழுகட்டங்களாக நடத்தப்பட்டது. ஏழாம் கட்ட தேர்வு ஜூலை மாதம் 31ந்தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வுகளுக்கான பதில்களை ஆர்.ஆர்.பி ஏற்கெனவே  வெளியிட்டது. முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை ஆர்.ஆர்.பி இன்னும் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கவில்லை . வருகிற மாத இறுதிக்குள் அந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்.டி.பி.சி பணிகளுக்கு ஏறக்குறைய 35,000 காலியிடங்களை ஆர்.ஆர்.பி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story