எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி


எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி
x
தினத்தந்தி 2 Oct 2021 7:47 AM GMT (Updated: 2 Oct 2021 7:47 AM GMT)

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இதன்பின் பேசிய ராணுவ தளபதி, லடாக்கில் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா தனது படைகளை குவிப்பது கவலையளிக்கிறது.சீனப் படைகளின் நகர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்  பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்” என்றார். 


Next Story