பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை


பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை
x
தினத்தந்தி 3 Oct 2021 4:31 AM GMT (Updated: 3 Oct 2021 4:31 AM GMT)

பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்-அமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கொல்கத்தா, 

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி என்பதால் பவானிபூர் இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

பவானிபூரில் முதல் 2 சுற்றுக்கள் நிலவரப்படி மம்தா பானர்ஜி, பாஜகவின் பிரியங்கா டிப்ரோலை விட 2,800-வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்-அமைச்சர்  பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


Next Story