பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு


பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Oct 2021 5:44 AM GMT (Updated: 5 Oct 2021 5:44 AM GMT)

அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் குற்றம் சாட்டியுள்ளது.

ஜெனீவா,

அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் குற்றம் சாட்டியுள்ளது. 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத், 'பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி இங்கு அமைதி, பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான் கான், 'ஒசாமா பின்லேடன்' போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாகப் போற்றுகிறார். 

ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தியாவுக்குள் நடக்கும் இவ்விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்க இவை தகுதியற்றவவை. சட்ட விரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றார். 

Next Story