உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் பஞ்சாப் முதல் மந்திரி


உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் பஞ்சாப் முதல் மந்திரி
x
தினத்தந்தி 5 Oct 2021 8:23 AM GMT (Updated: 5 Oct 2021 8:23 AM GMT)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஞ்சாப் முதல் மந்திரி சரன்ஜித் சிங் சன்னி இன்று சந்தித்துப் பேச உள்ளார்.

அமிர்தரஸ்,

 உள்துறை  மந்திரி அமித்ஷாவை பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல் மந்திரி சரன்ஜித் சிங் சன்னி இன்று சந்தித்துப் பேச உள்ளார். இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பின் போது லகிம்புர் கேரி மாவட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக  சரண்ஜித் சிங் சன்னி நேற்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டதுடன் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதுதொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார். இதே ஆவணத்தின் நகலும் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


Next Story