உத்தர பிரதேசம்: வரும் நவம்பர் 8 வரை 144 தடை உத்தரவு; லக்னோ போலீசார் அமல்
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் வருகிற நவம்பர் 8ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், லக்னோ நகரில் வருகிற நவம்பர் 8ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வருகிற நாட்களில் நடைபெறவுள்ள திருவிழாக்கள், பல்வேறு நுழைவு தேர்வுகள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றை முன்னிட்டு கொரோனா விதிகளை பின்பற்றும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் இந்த உத்தரவுகளை போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story