சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !


சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
x
தினத்தந்தி 6 Oct 2021 7:04 AM GMT (Updated: 6 Oct 2021 7:04 AM GMT)

டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.

புது டெல்லி,

தலைநகர் டெல்லியின் ஆனந்த் பார்பட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் கேஸ் கசிவால் நிகழ்ந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர்.

போலீஸ் துணை கமிஷனர் ஸ்வேதா சவுகான் கூறுகையில், சுசீலா என்கிற பெண் தனது 7 வயதான இரு குழந்தைகள்  மன்சி மற்றும் மோகன் ஆகியோருடன் டெல்லி ஆனந்த் பார்பட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  வசித்து வருகிறார். 

எதிர்பாராதவிதமாக, வீட்டில் உள்ள சமையல் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்தது. உடனே அங்கு தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அவர்கள் மூவரும் சிக்கினர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறினார்.

Next Story