நாட்டில் ஒரே நாளில் 22,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாடு முழுவதும் ஒரே நாளில் 22,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 22,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 24,602 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால், 3.32 கோடி பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.95 சதவீதம் ஆக உள்ளது.
நாட்டில் ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,49,538ல் இருந்து 4,49,856 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதம் ஆக உள்ளது.
நாடு முழுவதும் 2,44,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story