உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்; 12 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம், பாபுரி கிராமத்தில் நேற்று ஒரு தனியார் பஸ், லாரியுடன் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
அந்த பஸ் டெல்லியின் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. காலை 4.45 மணி அளவில், பாபுரி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பியபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பலத்த காயம் அடைந்து அலறி துடித்தனர்.
விபத்தில் 12 பயணிகள் இறந்தது தெரியவந்தது. மேலும் 32 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story