அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு


அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 1:33 AM GMT (Updated: 9 Oct 2021 1:33 AM GMT)

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இடாநகர்,

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.24 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story