தெலங்கானா, கோவாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்


தெலங்கானா, கோவாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 9 Oct 2021 2:46 PM GMT (Updated: 9 Oct 2021 2:46 PM GMT)

தெலங்கானாவில் தற்போது 4,288 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,67,725 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,929 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 245 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தெலங்கானாவில் தற்போது 4,288 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 6,59,508 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெலங்கானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதே சமயம் கோவா சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,77,040 ஆக அதிகரித்துள்ளது.

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,326 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 74 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவாவில் தற்போது 733 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,72,981 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கோவா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story