சோதனை நடந்த வேளையில் டி.வி.யில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த எடியூரப்பா!


சோதனை நடந்த வேளையில் டி.வி.யில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த எடியூரப்பா!
x
தினத்தந்தி 9 Oct 2021 7:25 PM GMT (Updated: 9 Oct 2021 7:25 PM GMT)

சோதனை நடந்த வேளையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு- டெல்லி அணிகள் விளையாடிய போட்டியை ஆர்வமுடன் எடியூரப்பா பார்த்து ரசித்தார்.

சிவமொக்கா, 

கர்நாடகத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா ஆகியோரின் உதவியாளரான உமேசின் வீடு, அலுவலகங்கள் உள்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் எடியூரப்பாவுக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஆனால் எடியூரப்பா அதுபற்றி கவலைப்படாமல் சிகாரிப்புராவில் உள்ள தனது வீட்டின் அருகே காரில் அமர்ந்தபடி அதில் இருக்கும் டி.வி. மூலம் நேற்று முன்தினம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு- டெல்லி அணிகள் விளையாடிய போட்டியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். தனது உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பற்றி கவலைப்படாமல் அவர் கிரிக்கெட் போட்டி பார்த்து ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Next Story