ரசாயன, உரத்துறை குழு தலைவராக கனிமொழி எம்.பி. மீண்டும் நியமனம்


ரசாயன, உரத்துறை குழு தலைவராக கனிமொழி எம்.பி. மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 9 Oct 2021 7:45 PM GMT (Updated: 9 Oct 2021 7:45 PM GMT)

ரசாயன, உரத்துறை குழு தலைவராக கனிமொழி எம்.பி. மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு, பல்வேறு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்களை நேற்று மாற்றி அமைத்தார். அதேநேரம், பல்வேறு நிலைக்குழு தலைவர்கள் மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில், ரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவராக தி.மு.க. எம்.பி. கனிமொழி மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Next Story