கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Oct 2021 3:26 PM GMT (Updated: 10 Oct 2021 3:26 PM GMT)

கேரளாவில் தற்போது 1,11,083 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,94,800 லட்சமாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று 85 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,258 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 12,655 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் தற்போது 1,11,083 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 46,56,866 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story