நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு; ஒரே நாளில் 18,132 பேருக்கு உறுதி
இந்தியாவில் கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் சமீப நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இது நேற்று 18,166, நேற்று முன்தினம் 19,740, கடந்த 8ந்தேதி 21,257 மற்றும் கடந்த 7ந்தேதி 22,431 ஆக இருந்தது. இதனால், தொற்று வித்தியாசம் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 193 பேர் (நேற்று 214) உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 782 ஆக உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% என்ற அளவில் உள்ளது.
21,563 பேர் குணமடைந்து சென்ற நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 478 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.99% ஆக உள்ளது. நாடு முழுவதும் 2,27,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story