கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 98% ஆக உயர்வு


கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 98% ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 6:26 AM GMT (Updated: 12 Oct 2021 6:26 AM GMT)

இந்தியாவில் கொரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98% ஆக உயர்ந்து உள்ளது.


புதுடெல்லி,

நாட்டில் கடந்த 224 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று 14 ஆயிரமாக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98% ஆக உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story