மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில்  தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 5:08 PM GMT (Updated: 12 Oct 2021 5:08 PM GMT)

மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ‘நாபன்னா’ எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட மந்திரிகளின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தலைமைச்செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடன் 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. ஒரு தொலைபேசி கோபுர சாதனத்தில் இருந்து தீ பற்றியிருக்கிறது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Next Story