மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது - கோவா எம்.எல்.ஏ


மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது - கோவா  எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 13 Oct 2021 10:32 AM GMT (Updated: 13 Oct 2021 10:32 AM GMT)

கோவா எம்.எல்.ஏ பிரசாத் கோன்கர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும் பாராட்டி பேசியுள்ளார்.

பனாஜி,

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் முன்னிலையில் கோவாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ கோன்கர், தற்போது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவாவில் பாஜக, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த அரசாங்கத்தின் கீழ் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் பாஜகவை மம்தா எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதை நாம் பார்த்தோம். இந்த நிலையில் நாடு மம்தா பானர்ஜியின் வடிவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்துள்ளது. கோவாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான லூய்சின்ஹோ பலேரோ சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story