கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 48 லட்சத்து 20 ஆயிரத்து 698- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,571 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது. எனினும், நேற்று 7,823- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய மேலும் 89,995- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story