மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 49- பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,219- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,219- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,139- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 29,555 ஆக உள்ளது. மராட்டியத்தில் கொரோனா மீட்பு விகிதம் 97.38 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,39,670- ஆக உயர்ந்துள்ளது.
மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 477- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புனே நகரில் 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story