மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா


மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Oct 2021 9:42 PM GMT (Updated: 13 Oct 2021 9:42 PM GMT)

தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.

மும்பை,

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 410 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7 லட்சத்து 48 ஆயிரத்து 168 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 162 ஆக உள்ளது. தலைநகர் மும்பையில் தற்போது 5 ஆயிரத்து 75 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேபோல ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதுநாள் வரையில் தாராவியில் 7 ஆயிரத்து 119 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 6 ஆயிரத்து 677 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25 பேர் மட்டும் நோய் தொற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story