மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா
தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.
மும்பை,
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 410 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7 லட்சத்து 48 ஆயிரத்து 168 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 162 ஆக உள்ளது. தலைநகர் மும்பையில் தற்போது 5 ஆயிரத்து 75 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதுநாள் வரையில் தாராவியில் 7 ஆயிரத்து 119 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 6 ஆயிரத்து 677 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25 பேர் மட்டும் நோய் தொற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story